மயிலாடுதுறையில் விரைவில் மருத்துவக்கல்லூாி!!

மயிலாடுதுறையில் விரைவில் மருத்துவக்கல்லூாி!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் விரைவில் மருத்துவக்கல்லூாி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளாா். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யனாதன், மயிலாடுதுறை மாவட்டத்தில் விரைவில் மருத்துவக்கல்லூாி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென பூம்புகார், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் விரைவில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்," எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதே போல் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என சட்டபேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || நிலவை நெருங்கும் சந்திராயன்-3!!