என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் ...!

என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  பணி நிரந்தரம் ...!

என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 517 தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யில் வேலை செய்துவரும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 480 ஒப்பந்த தொழிலாளர்களில் 517 பேர் பணி மூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்பட உள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பணி நிரந்தம் குறித்த அறிவிப்பில் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் தொழிலாளர்கள் தெரிவிக்கலாம் என்றும் என்.எல்.சி. நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

இதையும் படிக்க | NLC விவகாரம்; மக்களை சந்திக்க கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களுக்கு தடை!