9 கோடிக்கு 119 ஆபாச படங்களை விற்க திட்டமிட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்...

ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிடமிருந்து 119 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

9 கோடிக்கு 119 ஆபாச படங்களை விற்க திட்டமிட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்:  விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்...

ஆபாச படம் எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த ஜூலை மாதம் மும்பை போலீசாரால் கைது செய்யபட்டார். காரணம் அவர் ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக சொல்லப்பட்டதுடன் அவருடன் கூட்டு சதியில் ஈடுபட்ட தொழில்நுட்ப பிரிவின் அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.

 இந்த நிலையில் கடந்த 2 மாதமாக சிறையில் இருந்த அவர் நேற்று நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். ராஜ் குந்த்ராவின் வழக்கில் செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிரைவ் போன்றவற்றிலிருந்து சுமார் 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை சுமார் 9 கோடிக்கு விற்க அவர் திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஏற்கனவே நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது 1400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து மேலும் ஆபாச வீடியோக்கள் கைப்பற்றி இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.