இவங்க ஓரினச்சேர்க்கையாளர்.. சமந்தா விவகாரத்தில் நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்து 

இவங்க ஓரினச்சேர்க்கையாளர்.. சமந்தா விவகாரத்தில் நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்து 

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தங்களது பிரிவுக்கான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை. 

அதனால் சமூகவலைத்தளங்களில் அவர்களின் விவாகரத்து குறித்து பல்வேறு விதமாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக காஸ்டியூமர் பிரீத்தம் ஜுகல்கர் என்பவருடனும் சமந்தாவை இணைத்து செய்திகள் பரவின. அதையடுத்து பிரீத்தம், சமந்தா எனது சகோதரி போன்றவர் என்று விளக்கம் கொடுத்தார்.

இந்தநிலையில் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி அளித்த ஒரு பேட்டியில், சமந்தா- பிரீத்தம் ஜுகல்கரை இணைத்து வெளியான செய்தி பற்றி கூறுகையில், சமந்தா- பிரீத்தமிற்கு இடையிலான நட்பு காரணமாக கண்டிப்பாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். 

காரணம், பிரீத்தம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 சமீபகாலமாக சமந்தா ஓவரான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதனால் நாகசைதன்யா சமந்தாவிற்கிடையே அந்த விசயத்தில்கூட பிரச்சினை உருவாகி பிரிவுக்கு காரணமாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.