8 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகரை தனது திறமையால் ரீட்வீட் போட வைத்த இளம் இயக்குனர்

8 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகரை தனது திறமையால் ரீட்வீட் போட வைத்த இளம் இயக்குனர்

இளைஞர்கள் கொண்டாடும் லவ் டுடே

தமிழ் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் கதாநாயகனாக அவரே நடித்துள்ளார், கதாநாயகியாக பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தில் அறிமுகமான இவானா நடித்துள்ளார். 

மேலும், இப்படத்தில் பிரபல நடிகர்கள் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். லவ் டுடே மக்களிடம் தனி வரவேற்பை பெற்று மிக சிறப்பாக ஓடி கொண்டிருக்கிறது. மேலும் இளைஞர்கள் அனைவரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். 


விதிகளை மீறிய கோமாளி இயக்குனர் பிரதீப் 

பொதுவாக சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்றால் அவர் முதலில் பெரிய இயக்குநர்கள் யாரிடமாவது உதவி இயக்குநராக சில காலங்கள் பணிபுரிய வேண்டும் ஆனால் அந்த விதிகளையெல்லாம் தற்போது வரும் இளம் இயக்குனர்கள் தகர்த்து வருகின்றனர். அந்த வரிசையில், தான் எழுதிய கதைகளில் இருந்து ஒரு சிறு பகுதியை குறும்படமாக எடுத்து அதன் மூலம் தயாரிப்பாளர்களை கவர்ந்து இயக்குநர் ஆனவர் தான் பிரதீப் ரங்கநாதன்.

பிரதீப் தனது முதல் படத்திலேயே பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தார். மனிதத்தை உயர்த்திப்பிடித்த இவரின் முதல் படமான கோமாளி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான SIIMA விருதை பிரதீப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


ஹீரோவான இயக்குநர் 

லவ் டுடே..! பிரதீப் இயக்கிய இரண்டாவது படம், இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் தானே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இவரை இயக்குநராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் பார்வையாளர்கள். தன்னை உருவகேலி செய்தவர்கள் மத்தியில் ஹீரோவாக வலம் வருகிறார் இயக்குநர் பிரதீப்.


இளைஞர்களின் இன்றைய காதல்

இத்திரைப்படம் இப்போதுள்ள தலைமுறைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களான முகநூல், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், டிண்டர் போன்ற செயலிகள் மூலம் இன்றைய இளைஞர் செய்யும் லூட்டிகளை வெளிப்படையாக படம் போட்டு காட்டுகிறது இத்திரைப்படம். 

காதலர்கள் உத்தமன் பிரதீப்பும், நிக்கிதாவும் பண்டமாற்று முறைபடி தங்களது செல்போன்களை பரிமாற்றி கொண்ட பின்னர், இருவரது ரகசியங்களும் ஒருவருக்கொருவர் தெரியவர இருவருக்கும் இடையில் நிறைய சண்டைகள் வந்து பிரியும் நிலை ஏற்படுகிறது. இதையெல்லாம் கடந்து இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது தான் கதை.