பார்டர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.....

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்டர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்டர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.....

தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிக்கொண்டிருப்பவர் அருண் விஜய். அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்டர்’ குற்றம் 23' படத்துக்குப் பின் நடிகர் அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும்  மீண்டும் இணைந்து பணிபுரிந்துள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். 

விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து பணிகளும் முழுவதுமாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.