“இருள் ஆளப்போகிறது”... வருகிறது டிமான்ட்டி காலனி II...!

“இருள் ஆளப்போகிறது”... வருகிறது டிமான்ட்டி காலனி II...!

கடந்த 2015 ம் ஆண்டின் போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டிமான்ட்டி காலனி. இத்திரைப்படத்தில் அருள்நிதி , ரமேஷ், திலக், சனத் உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். இந்த படமானது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.

மு.க தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்ற தகவல் வெளியானதில் இருந்தே, மக்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தே இருந்தது. இந்நிலையில், படத்தின் புது தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | வாரிசு-க்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்? குறித்த தேதியில் வெளியாகுமா?

டிமான்ட்டி காலனி படத்தின் 40 சதவீத படபிடிப்பு முடிந்து விட்டதாகவும், படம் வெளியாக தயாராகி வருவதாகவும் ஒரு வீடியோவும் படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகம் போலவே அருள்நிதி நடிக்கும் இந்த படத்தில், அவருடன், பிரியா பவானி ஷங்கர் மற்றும், படத்தின் முக்கிய பேய்களாக நடித்த வெளிநாட்டவர்களும் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு, அஜய் ஞானமுத்து ஏற்கனவே அதிகரித்து வைத்திருந்த நிலையில், இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் குஷியைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | 55 அடி உயர அஜித் கட் அவுட்...ஆபத்தை உணராத ரசிகர்கள்...பாலாபிஷேகம் செய்து ஆரவாரம்...!