ராஷ்மிகாவிற்கு அல்லு அர்ஜுன் வைத்த செல்ல பெயர் என்ன தெரியுமா...!!

ராஷ்மிகாவிற்கு அல்லு அர்ஜுன் வைத்த செல்ல பெயர் என்ன தெரியுமா...!!

தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையானார். முக்கியமாக தமிழில் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் முதன்முறையாக அல்லுஅர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள புஷ்பா படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நடிகை சமந்தாவும் இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் வரும் சாமி ஹே சாமி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் புஷ்பா படம் உருவாகி உள்ளது. இதற்கிடையில் நாளை வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ரசிகர்கள் மத்தியில் நடிகை ராஷ்மிகா க்ரஷ் ஆகிவிட்டார். ஆகையால் நானும் அவரை ராஷ்மிகா என்று அழைக்காமல் க்ரஷ்மிகா என அழைக்க ஆரம்பித்துவிட்டேன் என்றும் நாம் பணியாற்றும் போது ஒரு சிலரிடம் மட்டும் நமக்கு இனம் புரியாத அன்பு ஏற்படும். அப்படி ஒருவர் தான் ராஷ்மிகா என கூறியுள்ளார்.