நானும் பிஎஸ்பிபி பள்ளி மாணவிதான்... அதை நினைத்து வெட்கப்படுகிறேன்!! வனிதா விஜயகுமார் குமுறல்

நானும் பிஎஸ்பிபி பள்ளி மாணவிதான்... அதை நினைத்து வெட்கப்படுகிறேன்!! வனிதா விஜயகுமார் குமுறல்

பத்ம சேஷாத்ரி பள்ளியின் முன்னாள் மாணவி என சொல்லிக்கொள்வதில் வெட்கப்படுகிறேன் என நடிகர் வனிதா விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில நாட்களாகவே சென்னை கே.கே.நகரின் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் தொடர்ந்து பாலியல் புகார்களை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் சக மாணவிகளையும், பெற்றோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், பிஎஸ்பிபி பள்ளியின் முன்னாள் மாணவியான வனிதா விஜயகுமார் தான் படித்த பள்ளியைப் பற்றியும் குழந்தை வளர்ப்பு பற்றியும் தன்னுடைய யூடியூப் வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார். அதில், தானும், தனது தங்கைகள் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவியும் பிஎஸ்பிபி பள்ளியில்தான் படித்தோம் என்றார்.

எனினும் நாங்கள் படித்த போது, இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கவில்லை என்ற அவர், தற்போது அப்பள்ளியின் முன்னாள் மாணவி என்று சொல்லிக்கொள்வதில் வெட்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த அவர், காவல்துறையினர் தற்போது விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதற்கு பாராட்டும் தெரிவித்தார்.