ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவரை தான் திருமணம் செய்து கொள்வேன்.... வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கண்ணா

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா தனது வருங்கால கணவருக்கு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவரை தான் திருமணம் செய்து கொள்வேன்.... வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கண்ணா

தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து , தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் ராஷி கண்ணா. அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வருகிறார்.

இதற்கிடையில் நடிகை ராஷிகன்னாவிடம் இணையதளத்தில் ரசிகர்கள் அவரது எதிர்கால கணவர் குறித்த கேள்வியை எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த அவர், எனக்கு ஆண் நண்பர் இல்லை, யாரையும் காதலித்ததும் இல்லை, எனது வாழ்க்கை துணைவரை கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.