இதுல அதிக ஈடுபாடு கொண்டவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - ராஷி கண்ணா

இதுல அதிக ஈடுபாடு கொண்டவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - ராஷி கண்ணா

கோலிவுட் திரையுலகிற்கு இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார் ராஷி கண்ணா. இதனை தொடர்ந்து அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 என பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சர்தார், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் பிடித்தமான நடிகர் நடிகைகள் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி கேட்டார். அதற்கு 

தமிழ் சினிமாவில் விஜய் தன்னை அதிகம் கவர்ந்த ஹீரோ என்று ராசிகண்ணா பதிலளித்துள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன் ஆகியோரை கூறியுள்ளார். அதேபோல் நடிகைகளில் அனுஷ்கா, சமந்தா இருவரையும் குறிப்பிட்டுள்ளார்.

வருங்கால கணவர் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நான் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவள். அதனால் என்னைப்போலவே ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவரையே திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.