சிம்புவிடம் தன் காதலை சொன்ன கீர்த்தி சுரேஷ்...குஷியான ரசிகர்கள்...!

நடிகர் கீர்த்தி சுரேஷும் சிம்புவும் காதலித்து வருவதாக நெட்டிசன்கள் ஒரு புதிய புரளியை கிளப்பி வருகின்றனர்.

சிம்புவிடம் தன் காதலை சொன்ன கீர்த்தி சுரேஷ்...குஷியான ரசிகர்கள்...!

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'. டைம்லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் கடந்த நவம்பர் 25-ந்தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியா மட்டுமில்லாமல்,வசூல் ரீதியாவும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளாது. .பல பிரச்சனைகளை தாண்டி ரிலீஸான மாநாடு படம் பிளாக்பஸ்டராகிவிட்டது.  

இந்நிலையில் மாநாடு படத்திற்கு வரும் நல்ல விமர்சனங்களை பார்த்து மகிழ்ச்சியோடு இருப்பதாக கீர்த்தி சுரேஷ் ட்வீட் செய்தார். அதில்,மிக அருமையான படத்தை கொடுத்த மொத்த படக்குழுவுக்கும் குடோஸ் என்றார் கீர்த்தி.  

கீர்த்தி சுரேஷின்  ட்வீட்டை பார்த்த சிம்பு, நன்றி தெரிவித்தார். சிம்புவின் பதிலை பார்த்த கீர்த்தி சுரேஷ்யோ, ஒரு ஹார்டினை போட்டு இருந்தார். ஆனால் அதை பார்த்த ரசிகர்களோ, சிம்புவிடம் லவ் சொல்லிட்டாங்க கீர்த்தி சுரேஷ் என்று புரளியை கிளப்பி உள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ்  சிம்புவிடம் தன்னுடைய காதலை சொல்லி இருப்பதாக நெட்டிசன்கள் புது ரூமரை கிளப்பி உள்ளனர்.

மாநாடு பட ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷன் கீர்த்தியின் நெருங்கிய தோழி ஆவார்.இருவருக்குமிடையில் நல்ல நட்பு இருந்து வருகிறது. அந்த  பாசத்தில் கீர்த்தி சுரேஷ் இப்படி  ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.