சாணிக்காயிதம் படப்பிடிப்பில் கீர்த்திசுரேஷ்!!

நடிகை கீர்த்தி சுரேஷ்  நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லும்  வீடியோ ஒன்றையும்  சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

சாணிக்காயிதம் படப்பிடிப்பில் கீர்த்திசுரேஷ்!!

மகாநடி, பெண் குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களைத் தொடர்ந்து  தமிழ்,மலையாளம், தெலுங்கு திரையுலகில்  முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை  மட்டுமே தேர்ந்தெடுத்து  நடித்து வருகிறார்.இவரது நடிப்பில்  உருவாகியுள்ள  'குட்லக் சகி', 'வாஷி' ஆகிய படங்கள்  படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது.

தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக அறிமுகமாகும் சாணிக் காயிதம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சாணிக் காயிதம் படப்பிடிப்பு வேகவேகமாக நடந்து வந்த நிலையில்,கொரோனா இரண்டாவது அலை காரணமாக  படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக மறுபடியும் வீட்டினுள் முடங்கிய கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில்  பதிவிட்டு சாணிக்காயிதம்  படப்பிடிப்பை மிஸ் செய்கிறேன் என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் மீண்டும்  படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளதையடுத்து  கீர்த்தி  நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லும்  வீடியோ ஒன்றையும்  சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.