200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பிரியாணி பட நடிகை அதிரடி கைது...

200 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இடைதரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி லீனா மரியா பாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பிரியாணி பட நடிகை அதிரடி கைது...

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 தொழிலதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கை சிறையிலிருந்து ஜாமீனில் எடுக்க உதவுவதாகவும், அதற்காக ரூ. 200 கோடி தன்னிடம் பெற்றதாகவும் சுகேஷ் சந்திரசேகர் மீது மனைவி ஷிவிந்தர் மோகன் சிங்  அதிதி சிங்  போலீஸில்  புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

 விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டே தனது காதலியான லீனா மரியா பால் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் லீனா மரியா பால் மற்றும் சுகேஷின் உதவியாளர்களான கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட லீனா மரியா பால் பிரியாணி படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். பாலிவுட்டில் ஜான் ஆபிரகாம் நடித்த மெட்ராஸ் கஃபே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.