2-வது திருமணம் குறித்து விளக்கம் அளித்த நாக சைதன்யா..! நானும், சமந்தாவும்...என்ன சொன்னார்?

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா இரண்டாவதாக திருமணம் செய்யப்போவதாக செய்திகள் பரவிய நிலையில் இது குறித்து அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

2-வது திருமணம் குறித்து விளக்கம் அளித்த  நாக சைதன்யா..! நானும், சமந்தாவும்...என்ன சொன்னார்?

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஜோடி சேர்ந்த இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு தங்கள் 4 வருட காதல் திருமணத்தை முடித்துக்கொண்டனர். இவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கும் திரையுலக பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு ரெடியாகி விட்டதாகவும், ஆனால் தனக்கு மணப்பெண் நடிகையாக இருக்க கூடாது என்று அவரது பெற்றோரிடம் கண்டிஷன் போட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. ஆனால் இது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

இதனையடுத்து தற்போது நடிகர் நாக சைதன்யா இந்த செய்திகள் குறித்து விளக்கமளித்துள்ளார். நானும், சமந்தாவும் இன்னும் சட்டபூர்வமாக பிரியவில்லை அதற்குள் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்திகள் கிளம்பியுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.