சசிகுமார் நடிப்பில் வெளியாக இருக்கும் காரி..."இது என் மண்ணின் கதை,ஜல்லிக்கட்டின் கதை" என பெருமிதம்...

சசிகுமார் நடிப்பில் வெளியாக இருக்கும் காரி..."இது என் மண்ணின் கதை,ஜல்லிக்கட்டின் கதை" என பெருமிதம்...

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. இப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் கதாநாயகனாக நடிக்க,பார்வதி அருண்  கதாநாயகியாக நடித்துள்ளார் .அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு
இசையமைத்துள்ளார்.வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி ,முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, பிரேம் என பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார், இது எனக்கான கதை.. என் மண்ணின் கதை.. ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம் தான் நடிப்பேன்.அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவா? என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படம் பண்ண முயற்சித்தேன், அது முடியவில்லை. லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேறி கொண்டேன் என விமர்சித்துள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள /// பவர் ரேஞ்சரின் சோக முடிவு ; அதிர்ச்சியில் 90'ஸ் கிட்ஸ் ரசிகர்கள்...

 இப்படத்தின் மூலம் ஒன்பதாவது முறையாக புதிய இயக்குனரை நான் அறிமுகப்படுத்துகிறேன். ஹேமந்த் நிச்சயமாக மிகப்பெரிய இயக்குனராக வருவார். இந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் இயக்குனர் ஹேமந்துக்கு பரிசாக கார் கொடுக்காமல், கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். படத்தில் என்னுடன் நடித்த நிஜமான ஜல்லிக்கட்டு வீரர்கள் எனக்கு பாதுகாப்பாக, பக்கபலமாக இருந்தனர்.  இதில் நடித்ததற்காக அவர்கள் கேட்ட ஒரே பரிசு இந்த படம் வெளியாகும்போது முதல்நாள் மதுரையில் அவர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பது தான். ரிலீஸ் அன்று அவர்களது ஆசையை நிறைவேற்ற போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள /// ஒருத்தன் கூட எழுதல...! - மேடையில் கொந்தளித்த ரஜினிகாந்த்...

இது மக்களுக்காக எடுத்த படம், ஜல்லிக்கட்டு பற்றிய படம்,அனைவரும் இப்படத்தை  தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டிரெக்ஷனில் படம் எடுக்குறேன் ,அதற்கான அறிவிப்பை இந்த படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்” என்றும்  கூறியுள்ளார்.முழுக்க முழுக்க இப்படம் ஜல்லிக்கட்டு பற்றி எடுக்கப்பட்டது.2017 ல் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது ,அப்போது தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதில் கலந்து கொண்டனர்.அதே போல் இப்படத்தை தமிழ் மக்களுக்காக எடுத்த படம் அனைவரும் சேர்ந்து இப்படத்தை பாராது ரசிக வேண்டு என அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 

மேலும் தெரிந்து கொள்ள ///  அது விபூதி இல்ல... கொக்கைன்... - வட இந்திய ரசிகர்களை கேலி செய்யும் நெட்டிசன்கள்...

---ஸ்வாதிஸ்ரீ