கேப்டன் விஜயகாந்த் பற்றி வெளிவந்த பரபரப்பு தகவல்...

ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த விஜயகாந்த் மீண்டும் நடிக்கப்போவதாக வெளிவந்த பரபரப்பு தகவல்.

கேப்டன் விஜயகாந்த் பற்றி வெளிவந்த பரபரப்பு தகவல்...

நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்து பலதரப்பட்ட ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. வித்தியாசமான கதை தேர்வுகள் மூலம் பல புதிய முயற்சிகளை தமிழ் சினிமாவில் மேற்கொண்டு வந்தாலும் கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் பெரிதாக அவருக்கு லாபத்தை ஈட்டித்தரவில்லை ஆனால் சமீபத்தில் வெளியான கோடியில் ஒருவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

அதன் வெற்றியை தொடர்ந்து கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டனுடன் இணைந்து மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடிப்பதற்கு விஜய் ஆண்டனி ஒப்பந்தம் ஆகியுள்ளார் இவருக்கு ஜோடியாக மெகா ஆகாஷ் நடிக்கவுள்ளார். ஒரு சராசரி மனிதனாக வாழும் அசாதாரண குணாதியசங்கள் படைத்த ஒருவனின் கதையாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மற்றொரு ஆச்சரியப்படும் தகவலும் வெளியாகியுள்ளது.

அரசியலுக்கு வருகை தந்த பிறகு பெருவாரியாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட விஜயகாந்த் கடைசியாக தனது மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் பெரிதும் வெளிநிகழ்வுகளுக்கு வருவதை தவிர்த்துவிட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு மனவேதனையை அளித்து வந்தது.

இந்நிலையில் ஆறுவருடம் கழித்து விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது விஜயகாந்தும் இணைத்துள்ளது ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளை தூண்டியுள்ளது.

30 வருடத்திற்கு முன்னர் சரத்குமாரும் விஜயகாந்தும் இணைந்து கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்திருந்தனர். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த வெற்றி கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.