எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒப்பாரி வரி பாடிய பாடகி திடீர் மரணம்..!
எஞ்சாயி எஞ்சாமி பாடலில் இடம்பெற்றிருந்த ஒப்பாரி வரிகளை பாடிய பாட்டி பாக்கியம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ இறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட’ என வைரல் ஹிட் பாடல்களை பாடியவர்.
இவரும் 'தெருக்குரல்' பேண்டைச் சேர்ந்த தெருக்குரல் அறிவு - சந்தோஷ் நாராயணன் மகள் தீ கூட்டணியில் செம ஹிட் அடித்த பாடல் தான்‘enjoy enjaami’. இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து வருகிறது.
இந்த பாடலில் 'என்னக் குறை என்னக் குறை என் செல்லப் பேராண்டிக்கு என்னக் குறை' என்ற வரிகளை பாடகி பாக்கியம்மா பாடி இருந்தார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்த விபரம் தெரியவந்துள்ளது.
பாடகி பாக்கியம்மா பாட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அறிவு, இறந்த உயிர்களுக்காக ஒப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போவீங்கன்னு எதிர்பார்க்கல பாட்டி. பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி.
ஒப்பாரி பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர். அவரது இந்த எதிர்பாராத மறைவு என்னை சோகத்தில் மூழ்கடித்துவிட்டது என்று இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram