பாம்புகளின் கண்கவர் நடனம்- வீடியோ வைரல்!  

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 பாம்புகள் பின்னிப்பிணைந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பாம்புகளின் கண்கவர் நடனம்- வீடியோ வைரல்!   

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 பாம்புகள் பின்னிப்பிணைந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. பண்ருட்டி அடுத்த ஓரையூர் பகுதியைச் சேர்ந்த சிவசந்திரன் என்பவரது வீட்டு தோட்டத்தில் 8 அடி நீளமுள்ள 2 பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடனமாடியது.

சுமார் 3 அடி உயரம் வரை 2 பாம்புகளும் தலையை தூக்கி ஆட்டம் போட்டது. சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த நடனத்தை சுற்றுவட்டார மக்கள் கண்டு மெய்சிலிர்த்து ரசித்தனர்.