நடிகை சனம் ஷெட்டி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச புகைப்படம்... சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

நடிகை சனம் ஷெட்டி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச புகைப்படம் வருவதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை சனம் ஷெட்டி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச புகைப்படம்... சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர் சனம் ஷெட்டி. தமிழில் ‘அம்புலி’  திரைப்படத்தில் நடித்த போது அவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலியாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானார். அதன்பின் தர்ஷனுடன் பிரச்சனை ஏற்பட்டு காவல் நிலையம் சென்று அவர் மீது மோசடி புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி தரும் வகையில் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின், தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை என்கேஜில் வைத்துள்ளார். 

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மர்ம நபர் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள்  வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரின் அடிப்படையில் மர்ம நபரின் தொலைபேசி எண்ணைப் பெற்று அடையாறு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.