100 யூனிட் இலவச மின்சாரம்; ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய அறிவிப்பு!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து அம்மாநில அமைச்சரவை நேற்று செயல்படுத்தியது.

100 யூனிட் இலவச மின்சாரம்; ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய அறிவிப்பு!!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குடும்பத்திற்கு மாதம் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ஜார்க்கண்ட் அமைச்சரவை வெள்ளிக்கிழமை(நேற்று) நிறைவேற்றியது.  அமைச்சரவைக் கூட்டத்தில் மொத்தம் 55 முன்மொழி முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்) தொடர்பாகவும் முடிவு எடுத்தது.

சில நிபந்தனைகளுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை மற்றுமொரு முக்கிய தீர்மானத்தையும் எடுத்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) உருவாக்க மேம்பாட்டு ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று அமைச்சரவை செயலக முதன்மைச் செயலாளர் வந்தனா டேடல் கூறினார்.