"நாடு முழுவதும் 10,000 மின்சாரப் பேருந்து சேவை" - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்.

"நாடு முழுவதும் 10,000 மின்சாரப் பேருந்து சேவை" - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்.

நாடு முழுவதும் 10 ஆயிரம் மின்சாரப் பேருந்து சேவைகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகளின் படி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 100 நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனக்கூறினார்.

பொதுத்துறை-தனியார் கூட்டுத் திட்டத்தின்படி அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்தில், திட்ட மதிப்பான 57 ஆயிரத்து 613 கோடி ரூபாயில் 20 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க   |  வடமாநில பயணியை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில்,...ரயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட்