ரூ.1,526 கோடி மதிப்பிலான 218 கிலோ ஹெராயின் பறிமுதல்.. கடத்தல்காரர்கள் கைது

ரூ.1,526 கோடி மதிப்பிலான 218 கிலோ ஹெராயின் பறிமுதல்.. கடத்தல்காரர்கள் கைது

அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஆயிரத்து 526 கோடி ரூபாய் மதிப்பிலான 218 கிலோ ஹெராயின் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அரபி கடலின் இந்திய எல்லை பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்திய கடலோர காவல் படை மற்றும் வருவாய் புலனாய்வு துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 2 படகுகளை லட்சத்தீவு அகட்டி கடற்கரை பகுதியில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தொடந்து படகுகளை சோதனை செய்தபோது அதில் ஆயிரத்து 526 கோடி ரூபாய் மதிப்பிலான 218 கிலோ ஹெராயின் போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தல்காரர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.