"பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை விட ஆங்கிலேயர்கள் யோக்கியர்கள்" ஆ.ராசா எம்.பி!!

"பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை விட ஆங்கிலேயர்கள் யோக்கியர்கள்" ஆ.ராசா எம்.பி!!

பொதுவெளியில் சனாதனம் குறித்து விவாதிக்க அமித்ஷா தயாரா என  திமுக எம்பி ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

புதுச்சேரி, அரியாங்குப்பம் வீராம்பட்டினம் பகுதியில் உள்ள விளையாட்டுத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த பொதுகூட்டத்தில், சிறப்பு விருந்தினர்களாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி மற்றும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு கலைஞரின் முழு உருவ சிலையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

அப்பொழுது பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி,  "மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு புதுச்சேரியில் இருந்து சொல்கின்றேன். பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் வாருங்கள். டில்லியில் பொதுவெளியில் லட்சம்பேர் கூடும் இடத்தில் சனாதனம் குறித்து விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா?" என சவால் விடுத்துள்ளார்.

மேலும், "சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால் தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லையெனில் வேறு வேலைக்கு சென்றிருப்பார். சனாதனத்திற்கு எதிராக நாங்கள் போராடியதால் தான  தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆளுநர், எங்களால் தான் ஆடு மேய்க்காமல் அண்ணாமலை இன்று ஐ.பி.எஸ், வானதி ஸ்ரீனிவாசன் இன்று வழக்கறிஞர்" என்று பேசியுள்ளார். 

மேலும்" நான் திறந்த வெளியில் சொல்கின்றேன் மோடி, அமித்ஷா, பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைவிட  வெள்ளைக்காரார்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள்" என்றும் சாடியுள்ளார்.

இதையும் படிக்க || தந்தையை இழந்த இளம் பாடகி, ஆறுதல் சொல்லி தேற்றிய இசையமைப்பாளர் தமன் !!