எங்களை அகதிகளா ஏற்றுக்கொள்ளுங்கள்… கண்ணீருடன் போராடும் ஆப்கான் மக்கள்…  

டெல்லியில் உள்ள ஐநாவின் அகதிகளுக்கான அலுவலகம் முன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான அகதிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

எங்களை அகதிகளா ஏற்றுக்கொள்ளுங்கள்… கண்ணீருடன் போராடும் ஆப்கான் மக்கள்…   

டெல்லியில் உள்ள ஐநாவின் அகதிகளுக்கான அலுவலகம் முன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான அகதிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு அகதிகள் அந்தஸ்து மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் உடனடியாக தங்களை வேறு நாடுகளில் மறுகுடியமர்த்த வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சர்வதேச நாடுகள் குறைவான எண்ணிக்கையிலேயே அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ளதாகவும் இதுவரை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே மறுகுடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் ஐநா விளக்கம் அளித்துள்ளது. முதற்கட்டமாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள்  மறுகுடியமர்த்தப்பட்டு வருவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.