வளையல் வியாபாரிக்கு சரமாரி அடி... சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் போலியான பெயரில் வியாபாரம் செய்த வளையல் வியாபாரி ஒருவரை, கும்பல் ஒன்று சரமாரியாக  தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வளையல் வியாபாரிக்கு சரமாரி அடி... சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்!

இந்தூரைச் சேர்ந்த வேற்று மத வளையல் வியாபாரி ஒருவர் தனது பெயரை மாற்றிக் கொண்டு மற்றொரு பகுதியில் வளையல் வியாபாரம் செய்துள்ளார். அப்போது அவரைச் சூழ்ந்து கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியது. மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த வளையலையும் உடைத்தது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஏராளமானோர் காவல்நிலையத்தில் குவிந்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  வளையல் வியாபாரம் செய்தவர் பெயர் தஸ்லிம் என்பது தெரியவந்தது. அந்த நபர் இரண்டு ஆதார் கார்டுகள் மற்றும் பாதி எரிந்த வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளதால்,  அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

https://twitter.com/TheDeshBhakt/status/1429496301440311297