குஜராத் மாநிலத்தின் முதல்வரானார் இவர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அம்மாநிலத்தின் பெரும்பான்மை சமுதாயமான படேல் சமுதாயத்தை சேர்ந்த பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் முதல்வரானார் இவர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அம்மாநிலத்தின் பெரும்பான்மை சமுதாயமான படேல் சமுதாயத்தை சேர்ந்த பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த விஜய் ரூபானி திடீரென  பதவி விலகினார். இதையடுத்து அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பர்ஷோட்டம் ருபாலா உள்ளிட்டோரில் ஒருவர் அம்மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் வெளிவந்தன. இந்நிலையில் புதிய முதலமைச்சரை முடிவு செய்வதற்கான எம்.எல்.ஏக்கள் கூட்டம் காந்திநகரில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

மத்திய  அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் புதிய முதலமைச்சராக பூபேந்தர் பட்டேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பூங்கொத்து கொடுத்து  வாழத்து  தெரிவித்தார். நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பூபேந்தர் பட்டேல் பதவியேற்க உள்ளார். அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெரும்பான்மையாக உள்ள படேல் சமுதாயத்தின் வாக்குகளை கவரும் வகையில், அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது