மைனா படத்தில் வருவது போல் தொங்கிய பேருந்து – தப்பினார்களா பயணிகள்?  

இமாச்சலப் பிரதேசத்தில் மலைப் பாதையின் தடுப்பை உடைத்துக் கொண்டு தொங்கிய பேருந்தில் இருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மைனா படத்தில் வருவது போல் தொங்கிய பேருந்து – தப்பினார்களா பயணிகள்?   

இமாச்சலப் பிரதேசத்தில் மலைப் பாதையின் தடுப்பை உடைத்துக் கொண்டு தொங்கிய பேருந்தில் இருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பெரு மழை வெள்ள பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் ஷிர்மாய் மாவட்டத்தில் ஷில்லாய் என்னும் பகுதியில் 22 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழும் நிலைக்குச் சென்றுள்ளது. ஆனால் மைனா திரைப்படத்தில் வருவது போல், அந்தப் பேருந்து, தடுப்புக்கும், பள்ளத்துக்கும் இடையே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனால், பயணிகள் பயத்தில் அலறிக் கொண்டிருக்க, ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை கவிழ விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்த போது பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். இதை அடுத்து ஓட்டுநரும் தப்பினார்.