தெலுங்கானாவில் 12 மணி நேர வேலை சட்டம் குறித்து தமிழிசை பேச முடியுமா?அன்பழகன் கேள்வி

தெலுங்கானாவில் 12 மணி நேர வேலை சட்டம் குறித்து தமிழிசை பேச முடியுமா?அன்பழகன் கேள்வி

தெலுங்கானாவில் 12 மணிநேர வேலை சட்டத்தை கொண்டு வருவது குறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச முடியுமா என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார். 

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், தொழிலாளர் விரோத சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகளும், ஆளும் அரசின் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து தமிழக அரசு அந்த மசோதாவை நிறுத்தி வைத்துள்ளது.

இதையும் படிக்க : 'ஆபரேஷன் காவேரி' மீட்பு பணிக்கு ஒத்துழைக்க நாங்கள் தயார்...முதலமைச்சர் கடிதம்!

ஆனால், 12 மணிநேர வேலை சட்டத்திற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாக கருத்து தெரிவிப்பது தொழிலாளர்களுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

திமுக அரசுக்கு ஆதரவாக கருத்து கூறும் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானாவில் 12 மணிநேர வேலை சட்டத்தை கொண்டு வருவது குறித்து பேச முடியுமா? என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்.