அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசுக்கு எதிரான சத்யாகிரக போராட்டம் தொடரும் - ப.சிதம்பரம் சாடல்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசுக்கு எதிரான சத்யாகிரக போராட்டம் தொடரும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சூளுரைத்துள்ளார்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசுக்கு எதிரான சத்யாகிரக போராட்டம் தொடரும் - ப.சிதம்பரம் சாடல்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 2வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.

இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில்  போராட்டம் நடைபெற்ற நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சட்டத்தையோ ஜனநாயகத்தை மதிப்பது இல்லை என்றும், கடந்த 4-5 ஆண்டுகளில் எந்த ஒரு பாஜக தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.