கொரோனா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது- யோகி ஆதித்யநாத்  

உத்தரபிரதேசத்தில் கொரோனா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என  முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது- யோகி ஆதித்யநாத்   

உத்தரபிரதேசத்தில் கொரோனா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என  முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கோரக்பூர் பகுதியில் பொதுகூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலம் முழுவதும் 12.6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 8.24 கோடி தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தற்போது வரை மருத்துவமனைகளில் 1.8 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், தொற்றை எதிர்கொள்வதிலோ அல்லது கட்டுப்படுத்துவதிலோ உத்தரபிரதேசம் எந்த வகையிலும் பலவீனமாக இல்லை என்றும் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பதாகவும் கூறினார்.