தடம்புரண்ட கோதாவரி ரயில்; அசம்பாவிதம் தவிர்ப்பு

தடம்புரண்ட கோதாவரி ரயில்; அசம்பாவிதம் தவிர்ப்பு

ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே பீபி நகரில் கோதாவரி விரைவு ரயில் தண்டவாளத்தில் இருந்து தடை புரண்ட விபத்தில் நல்வாய்ப்பாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்த கோதாவரி விரைவு ரயில், ஐதராபாத்தை நெருங்கியபோது பீபி நகர் பகுதியில் தண்டவாளத்தை விட்டு லேசாக தடம் புரண்டது. ரயிலில் 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேறியதால் பயணிகள் பீதியடைந்தனர். ஆனால், சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர், உடனே ரயிலை பத்திரமாக நிறுத்தியதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.