மாணவர்களை கொடூரமாக கடித்த நாய்... வெளியான சிசிடிவி காட்சிகள்...
பள்ளி மாணவர்களை தெரு நாய் கடித்து குதறியதால், கழுத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா | கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூராச்சுண்டு என்னும் பகுதியில் இன்று காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கு செல்வதற்காக மாணவர்கள் சாலையை கடக்க முயலும் போது, இவர்களது பின்னாலிருந்து தெரு நாய் ஒன்று தாக்க வந்துள்ளது.
இதில் தெரு நாய்க்கு பயந்து கால் தடுக்கி விழுந்த மாணவர் ஒருவரை தெரு நாய் பயங்கரமாக கழுத்தில் தாக்கியுள்ளது. மேலும் பின்னால் நின்ற மாணவனையும் கடித்துள்ளது.
தெரு நாயின் கடியால் கழுத்திலும், கைகளிலும் பலத்த காயமடைந்த இரு மாணவர்களையும் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது . சமீப காலமாக கேரளா முழுவதும் தெரு நாய்களின் கடியால் தினசரி ஏராளமானோர் பாதிக்கப்பட்ட வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கீழே விழுந்த மாணவனை தெரு நாய் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | மேள தாளத்துடன் ஒரு ஊரே சேர்ந்து நடத்திய விநோத திருமணம்...