20 மாதங்களுக்கு பிறகு தொடக்க பள்ளிகள் இன்று திறப்பு  

20 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.

20 மாதங்களுக்கு பிறகு தொடக்க பள்ளிகள் இன்று திறப்பு   

20 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதையடுத்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்று கர்நாடக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது.

அதன்படி கர்நாடகத்தில் இன்று தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.