காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர்...புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்!

காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர்...புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், இன்று தனது புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து ஜம்மு காஷ்மீரில் அறிவிக்க உள்ளார்.

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய குலாம் நபி ஆசாத், கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார். இதைத்தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 20 பேருக்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகினர்.

இதையும் படிக்க: பொதுக்குழு வழக்கு: நீதிபதிகளின் தீர்ப்பு விருப்பத்தின் படியா..? சட்டத்தின்படியா?

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று ஒரு பேரணியை நடத்தி, தான் தொடங்க உள்ள புதிய கட்சி குறித்து குலாம்நபி ஆசாத் அறிவிக்க உள்ளார். ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியிலோ அல்லது பிடிபி கட்சியிலோ கூட்டணி அமைத்து தனது புதிய கட்சியை அவர் வழிநடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.