அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம்..!

அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசுப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்த வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். சுகாதாரத்துறை ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுவோர் என அனைத்து துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

ஒருபுறம் கோரிக்கைகள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்தாலும், உடனடி தீர்வு கிடைத்தால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என அரசு ஊழியர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் அரசுப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.