மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கும் கொரோனா பாதிப்பு.. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியதை அடுத்து சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கும் கொரோனா பாதிப்பு.. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதில் தீவிர தொற்று பாதிப்புக்கு நேற்று மட்டும் 7பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆயிரத்து 513 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ளதாகவும் 26 ஆயிரத்து 976 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் இதுவரை 194 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 543 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.