டெல்லியை புரட்டி போட்ட சூறைக்காற்று.. அரை மணி நேரம் பெய்த கனமழை!!

டெல்லியை புரட்டிய சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால்  பெரும்பலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

டெல்லியை புரட்டி போட்ட சூறைக்காற்று.. அரை மணி நேரம் பெய்த கனமழை!!

டெல்லியில் இன்று மாலை திடீரென இருள் சூழ்ந்த நிலையில் கரு மேகங்களுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

மழையோடு சேர்த்து மணிக்கு 60 கிலோ மீட்டருக்கு மேல் சூறைக்காற்றும் வீசியதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். குறிப்பாக திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் காற்றின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினர்.

30 நிமிடங்கள் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றினால் டெல்லியில் பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.  இதன் காரணமாக போக்குவரத்து பல்வேறு இடங்களில் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலை காணப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மரங்கள் சாய்ந்துள்ளதால் பலர் காயமடைந்துள்ளனர்.

சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில்  போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.