மக்கள் நிம்மதியாக இருந்தால் தான் இந்தியா வல்லரசாகும் - தேசிய இளைஞர் காங்கிரஸ் கட்சி செயலாளர் ஜோஷ்வா

மக்கள் நிம்மதியாக இருந்தால் தான் இந்தியா வல்லரசாகும் - தேசிய இளைஞர் காங்கிரஸ் கட்சி செயலாளர் ஜோஷ்வா

இந்தியாவில் ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை போல் பா. ஜ.க.விடம் இருந்து எல்லா தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ இளைஞர் காங்கிரஸ் கட்சி போராடும் என்று தேசிய இளைஞர் காங்கிரஸ் கட்சி செயலாளர் ஜோஷ்வா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இந்தியாவில் 40 ஆண்டுகளாக இல்லாத வகையில் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி மக்களுக்கு தேவையான விஷயங்களுக்காக பா. ஜ.க.விடம் போராடும் எனவும் கூறியுள்ளார்.

2024ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், எல்லா மக்களும் நிம்மதியாக இருந்தால் தான் இந்தியா வல்லரசாக மாறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.