அசாம் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.. ஏன்?

அசாம் மாநிலத்தின் 4 மாவட்டங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.. ஏன்?

முகமது நபி குறித்த நுபுர் ஷர்மாவின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசாம் மாநிலத்தின் கச்சார் பகுதியில், 'ஓவைசி ரசிகர் மன்றம்' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று 2 பேரணிகளை நடத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கச்சார் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்க கூடிய அச்சுறுத்தல்கள் உள்ள, மேலும் 3 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.