மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான தேர்வுகளை 13 மொழிகளில் நடத்த முடிவு...!

மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான தேர்வுகளை 13 மொழிகளில் நடத்த முடிவு...!

மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான  தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான கணினி வழி  தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதையும் படிக்க : ராகுலின் பதவி நீக்கத்தை கண்டித்து...காங்கிரஸார் ரயில் மறியல் போராட்டம்...!

ஆனால், இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்த தேர்வை தமிழிலும், இதர தாய் மொழிகளிலும் நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான கணினி வழி  தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும் எனவும், இது உள்ளூர் இளைஞர்களின் பங்கேற்புக்கு உத்வேகத்தை அளிக்கும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.