அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை...!!!

அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை...!!!

அம்பேத்கர் சிலைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

சட்டமேதை டாக்டர் அண்ணல் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அம்பேத்ககர் சிலை மற்றும் உருவபடத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

அதனை தொடர்ந்து சோனியா காந்தி, ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, என்சிபி தலைவர் சரத் பவார், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஆகியோரும் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:  வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்கும் வனத்துறை...!!