இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 948 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது.

 அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 43ஆயிரத்து 903 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 21லட்சத்து 81ஆயிரத்து995 ஆக அதிகரித்தது.

 நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்படவர்களில் 219 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 4 லட்சத்து 4 ஆயிரத்து 874 பேர் மருத்துவமனைகளில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.