கேரளாவில் மாயமான பள்ளி மாணவ, மாணவிகள்... கோவை ரயில் நிலையத்தில் மீட்பு...

கேரளாவில் மாயமான பள்ளி மாணவ, மாணவிகள் 4 பேர் கோவை ரயில் நிலையத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்.

கேரளாவில் மாயமான பள்ளி மாணவ, மாணவிகள்... கோவை ரயில் நிலையத்தில் மீட்பு...

கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த 15 வயது மாணவிகள் இருவர் மற்றும் அவர்கள் படிக்கும் இரண்டு 15 வயது மாணவர்கள், 9 ஆயிரம் பணம், மற்றும் தங்க நகைகளுடன் மாயமாகினர். இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் கேரளா ஆலந்தூர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று மாலை கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்த 4 பேரையும், அங்கு பணியில் இருந்த ரயில்வே போலிசார் பிடித்து விசாரணை செய்த போது, வீட்டில் இருந்து கடந்த 3 ஆம் தேதி 4 பேரும் கிளம்பி கோவை பொள்ளாச்சி, ஊட்டியில் சுற்றிவிட்டு இன்று கோவை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்ல முயன்றது தெரியவந்தது. பிடிபட்ட 4 பேரையும் ரயில்வே போலீசார் மீட்டு, பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.