"ஊழலை வளர்க்கவே காங்கிரஸ் பணியாற்றுகிறது" பிரதமர் மோடி விமர்சனம்!!

"ஊழலை வளர்க்கவே காங்கிரஸ் பணியாற்றுகிறது" பிரதமர் மோடி விமர்சனம்!!

ஊழலை வளர்க்கவே காங்கிரஸ் தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

பாஜகவின் பஞ்சாயத்து பிரதிநிதிகள் மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை எனவும் காகிதங்களில்தான் நடவடிக்கைகள் இருந்ததே தவிர நடைமுறைகளில் எதுவும் சாத்தியப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், சுதந்திரம் அடைந்து 40 ஆண்டுகள் ஆகியும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அவசியம் காங்கிரசுக்குப் புரியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், ஊழலை வளர்க்கவே காங்கிரஸ் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க || "என் மண் என் மக்கள் யாத்திரைக்கு காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகின்றனர்" திருநாவுக்கரசர் எம்.பி!!