92% அதிகமான பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்...

நாட்டில் 92 விழுக்காட்டுக்கும்  அதிகமான பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

92% அதிகமான பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்...

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு மற்றும் ஆசிரியர்களின் தடுப்பூசி செலுத்திய நிலை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆய்வு செய்தார்.

இந்தக் கூட்டத்தில். நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் இயல்பு நிலையும், துடிப்பான ஆர்வமும் இயல்பு நிலைக்கு திரும்புவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தற்போது வரை பெரும்பாலான மாநிலங்கள் அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகளை ஏற்கனவே திறந்துள்ளன.

92 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளதாகவும், மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் 96 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என கூட்டத்தில் தெரிவிக்கபட்டது.