தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த இன்று முதல் தடை...

குஜராத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த இன்று முதல் தடை...

குஜராத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே தடுப்பூசியின் மீதுள்ள அச்சத்தை போக்கி, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தும் நோக்கில் குஜராத்தின் அகமதாபாத்தில் மக்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையாவது செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செலுத்தாதவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ அல்லது கன்காரியா ஏரி முகப்பு, சபர்மதி ஆற்றங்கரை, நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு வளாகம் போன்ற பொது இடங்களுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நகராட்சி சேவைகளைப் பெறுவதற்கும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.