நுபுர் சர்மாவின் சர்ச்சைக் கருத்து.. போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது!!

நுபுர் சர்மாவின் சர்ச்சைக் கருத்து, வடமாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக 500க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுபுர் சர்மாவின் சர்ச்சைக் கருத்து.. போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது!!

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, இஸ்லாமியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேற்குவங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம் வெடித்தது.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தி, பல்வேறு தரப்பினரை கைது செய்தனர்.

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, 333 பேரும், மேற்குவங்கத்தில் 200 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 55 பேர் மீது எப். ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.