எதிர்க்கட்சி பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா - மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறாரா?

எதிர்க்கட்சி பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா - மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறாரா?

குடியரசுத்தலைவருக்கான தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, தமிழ்நாடு முதலமைச்சரை சந்திப்பதற்காக  நாளை சென்னைக்கு வருகை தர உள்ளார். 

குடியரசுத்தலைவருக்கான தேர்தல் வரும் ஜுலை 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்முவும், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் நாடு முழுவதும் அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னைக்கு நாளை யஷ்வந்த் சின்ஹா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நாளை மாலை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, ஆதரவு திரட்ட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.