ராஜஸ்தானில் 3 வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கம் ... ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!!
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 8.01 மணியளவில் 3.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிகார் மற்றும் ஃபதேபூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் மூன்று வினாடிகள் நீடித்ததாக ஃபதேபூரில் உள்ள உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால், எந்தொரு உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்ட்டுள்ளது.
Earthquake of Magnitude:3.8, Occurred on 18-02-2022, 08:01:24 IST, Lat: 27.55 & Long: 75.19, Depth: 5 Km ,Location: 92km NW of Jaipur, Rajasthan, India for more information Download the BhooKamp App https://t. co/1dNw4HD6pd @ndmaindia @Indiametdept pic.twitter.com/vnESAKZ0SK
— National Center for Seismology (@NCS_Earthquake) February 18, 2022